.

Pages

Thursday, September 3, 2020

தஞ்சை மாவட்டத்தில் மூச்சு திணறல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் பல்ஸ் ஆக்சி மீட்டர் முலம் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்!

அதிரை நியூஸ்: செப்.03
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக மூச்சு திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் பல்ஸ் ஆக்சி மீட்டர் முலம் பிராணவாயு அளவு கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, கும்பகோணம் அரசுமருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறிய அளவிலான எளிதாக எடுத்து செல்லும் வகையில் 100 உருளைகள் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
   
கொரோனா அல்லாத பொதுமக்கள் தங்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் தாங்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும் மேலும்  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் எனப்படும் பிராணவாயு அளவு கண்டறியும் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் எனப்படும் உடற்வெப்ப அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றை கட்டாயம் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை பயன்படுத்தி தினமும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும்தங்கள் உடலின் பிராணவாயு அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பரிசோதனையில் ஆக்சிஜன் அளவு 95 க்கு கீழ்யிருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
     
மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடன் புதியதாக மூச்சு திணறல் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகாமையில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு முகாமில் பல்ஸ் ஆக்சிமீட்டர் முலம் பிராண வாயுவின் அளவு குறித்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடன் புதியதாக மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு கொரோனா அல்லாத தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது ஆகையினால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை எக்காரணத்தைக் கொண்டும் சுயமாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.