ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
வருகின்ற அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கவுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்புடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூன்று வருவாய் கோட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலுள்ள அலுவலர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும்.
அக்டோபர் மாதம் முதல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்திட வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை ஆய்வு செய்து மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், அதிக பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகள், மிதமான பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகள், குறைவான பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகள் என வகைப்படுத்தியுள்ள இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் நீச்சல் மற்றும் மரம் ஏறத்தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் பெண்கள் 20 நபர்களைக் கொண்ட குழுவினரை முதல்நிலை பொறுப்பாளர்களாக நியமித்து தீயணைப்புத் துறையினர் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் பேரிடர் ஒத்திகை பயிற்சியினை நடத்திட வேண்டும். பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், அரசு பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் மின்சாதனங்கள், வடிகால் சாக்கடைகள் ஆகியவற்றை பராமரித்து தயார் நிலையில் வைத்திட வேண்டும். வெள்ள காலங்களில் ஏற்படும் நீர்நிலை உடைப்புகளை சரி செய்ய தேவையான மணல் மூட்டைகள் மற்றும் சாக்கு பைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அளவு மருந்து பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் உயர்வான இடத்தில் உள்ளதா எனவும் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் TNSMART செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மரம் அறுக்கும் இயந்திரங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பழுதான மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை சரி செய்ய வேண்டும். மழை அளவு குறித்த விவரங்கள் மற்றும் இதர எச்சரிக்கை விவரங்களை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அவ்வப்போது தெரிவித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(பொ) மகேஸ்வரன், பயிற்சி ஆட்சியர் அமித், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மனோகரன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.