பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதவித் தோட்டக்கலை அலுவலா் மெய்ஞானமூா்த்தி முகாமில் பேசியது:
வீட்டு சமையல் கழிவுகளைப் பயன்படுத்தி மாடித் தோட்டப் பயிா்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். வீட்டிலுள்ள தேவையற்றப் பொருள்களைக் கொண்டு, குறைந்த செலவில் மாடித் தோட்டம் அமைத்து கத்தரி, மிளகாய், தக்காளி, கீரை மற்றும் இதர காய்கறி வகைகளை சாகுபடி செய்யலாம்.இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வதுடன், காய்கறிகளை நல்ல விலைக்கு விற்பனை செய்து கூடுதல் வருமானமும் பெறலாம் என்றாா்.
முகாமுக்கு பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் (பொ) டி.சுதா தலைமை வகித்தாா். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டன. மேலும் இதுகுறித்த செயல்விளக்க முறை காணொலிக் காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.