மத்திய அரசின் விவசாய மசோதாவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சட்ட நகல் கிழித்தெறிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எஸ்.முகமது ஜாவித் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி கண்டன உரை நிகழ்த்தினார்.
போராட்டத்தில், மத்திய அரசின் விவசாய மசோதாவைக் கண்டித்து, மசோதாவின் சட்ட நகல் கிழித்து வீசப்பட்டது. மேலும், இம்மசோதாவை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில், அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் என்.எம் ஷேக்தாவுது, இணைச் செயலாளர் சி. அகமது, கிளைத் (1) தலைவர் எம்.ஐ. ஜமால் முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.