.

Pages

Saturday, September 5, 2020

அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 10 மாட்டு வண்டிகள் பறிமுதல் - தாசில்தார் அதிரடி!

பேராவூரணி செப்.05-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் அனுமதி இன்றி ஆற்று மணல் ஏற்றிச் சென்ற 10 மாட்டு வண்டிகளை பேராவூரணி தாசில்தார் திடீர் சோதனை நடத்தி பறிமுதல் செய்தார்.

பேராவூரணி பகுதியில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக, பட்டுக்கோட்டை சார் ஆட்சியராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட, ஐஏஎஸ் அலுவலர் பாலசந்தருக்கு தொடர்ந்து புகார் வரப்பெற்றது.

இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், பேராவூரணி தாசில்தார் ஜெயலெட்சுமி தலைமையில், பேராவூரணி ஆர்.ஐ., கிள்ளிவளவன், முதுநிலை ஆர்.ஐ., சுப்பிரமணியன், நாட்டாணிக்கோட்டை விஏஒ சக்திவேல், கைவனவயல் விஏஒ கணேசன், டிரைவர் சிவகுமார், கிராம உதவியாளர்கள் கண்ணன், சக்திவேல், சுரேஷ், ராமஜெயம், திருமலை ஆகியோர் அடங்கிய, ரோந்துப்படை சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் ஆய்வு நடத்தினர்.

நாட்டாணிக்கோட்டை, செங்கமங்கலம், கழனிவாசல், கொரட்டூர், ஆதனூர், கருப்பமனை, ஊமத்தநாடு, பின்னவாசல், பெரியகத்திக்கோட்டை, பேராவூரணி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த திடீர் சோதனை காலை 9 மணி வரை நடைபெற்றது.

தாசில்தார் அதிரடி நடவடிக்கையில், அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்ததாக, நாட்டாணிக்கோட்டையில் 4, பெரியகத்திக்கோட்டையில் 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள் பேராவூரணி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. அனுமதி இன்றி மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.