.

Pages

Wednesday, September 23, 2020

பட்டுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.23
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் (22.09.2020) மேற்கொண்டார்.

செய்தியாளரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 9495 அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 8204 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1143 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 147 நபர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6096 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சிää பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மூலம் இதுவரை 282948 நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டுää அவர்களில் நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுää நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

மேலும், அறிகுறி இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு வருவாய்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களின் ஆய்வின் அடிப்படையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும்ää தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. களப்பணியாளர்களுக்கு 900-க்கும் மேற்பட்ட பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத காரணத்திற்காக இதுவரை 2,692 த்திற்க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தங்கள் பகுதியில் நடைபெறும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக சுமார் 4000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில், உச்ச நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கிட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த்துறை  மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் 3000 நபர்கள் விதிகளை மீறி கிசான் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 1.2 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. வரவு வைக்கப்பட்ட பணத்தில் இதுவரை சுமார் 67 லட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 

திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் பசுமை வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து இரண்டு ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிசான் திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட வடசேரி ரோடு பள்ளிவாசல் தெருவில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்துää அந்த பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கே செய்யப்பட்டுள்ள தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்தும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் பெருமாள் கோவில் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, சுற்றிலும் பலன்தரும் மரங்களை கரைகளில் நடவும், சுற்றுப்பாதை ஏற்படுத்திடவும், இரவு நேரத்தில் பயன்படுத்தும் வகையில் விளக்குகள் அமைக்கவும், சுற்றிலும் தடுப்புக் கம்பி வேலி அமைத்து பாதுகாத்திடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. 

ஆய்வின் போது பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பையா பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி.தரணிகா, நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.