பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று செவ்வாய்கிழமை காலை திமுக அதிரை பேரூர் சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்வுக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். திமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் (தெற்கு) செயலாளர் சத்திய விஜயன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ ஏனாதி பாலசுப்பிரமணியன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் கடைத்தெரு தக்வாப் பள்ளி முக்கம், ஈஸ்ட் கோஸ்ட் சாலை, காலேஜ் முக்கம், வண்டிப்பேட்டை, பிஎஸ்என்எல் அலுவலகம், பழஞ்செட்டித்தெரு ஆகிய இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், எம்.எம்.எஸ் அப்துல் கரீம், ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் என்.கே.எஸ் சபீர், அதிராம்பட்டினம் பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், மாவட்ட பிரதிநிதிகள் இன்பநாதன், எம்.பகுருதீன், ஒன்றியப் பிரதிநிதிகள் முல்லை ஆர்.மதி, வீரப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் என்.எம் செய்யது முகமது, என்.கே.எஸ் முகமது சரீப், எஸ்.எம்.ஜி பசூல்கான், ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் கே.இத்ரீஸ் அகமது, இளங்கோ, அதிரை மைதீன் (இளைஞர் அணி), இ.வாப்பு மரைக்காயர், நூர் முகமது (நூவண்ணா), முத்துராமன், எம்.எம்.எஸ் அன்வர் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.