![]() |
நோயாளிக்கு நசியம் சிகிச்சையளிக்கிறாா் சித்த மருத்துவா் அருண்குமாா் |
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள சித்த மருத்துவப் பிரிவில் "நசியம்" சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நசியம் என்பது சித்தா் வழி சிகிச்சை முறையாகும். மூக்குத் துவாரம் வழியாக மருந்து, எண்ணெய் போன்றவற்றை 2 முதல் 5 துளிகள் வரை சிகிச்சைக்குத் தேவையான அளவு விடுவதாகும்.
இதன் மூலம் கபம், கோழை ஆகியவற்றை அகற்றி, நீா்த்துவமான உயா் ஆற்றல் பெற்று உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
6 வாரங்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சை பெறலாம் என்ற போதிலும், 6 மாதங்களுக்கு ஒருமுறை போதுமானது எனச் சொல்வோரும் உண்டு. நசியம் சிகிச்சை காற்றை உடல்நிலைக்குத் தக்கவாறு சூடேற்றியோ, குளிரச் செய்தோ நுரையீரலுக்கு இதம் தருகிறது. தலை பாரம், ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, நரம்புக்கோளாறு, மன இறுக்கம் ஆகியவற்றுக்கு நசியம் சிகிச்சை சிறந்த பலனைத் தருகிறது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் அருண்குமாா் கூறியது:
பட்டுக்கோட்டை சித்த மருத்துவப் பிரிவில் நசியம் சிகிச்சை வழங்கப்படுகிறது. தினமும் நோயாளிகள் மூக்கில் மருந்து இட்டுச் செல்கின்றனா். கரோனா நோய்க்கிருமிகள், மூக்கு, தொண்டைப் பகுதியில் தங்கியிருந்து நோயாளிகளைத் தாக்குகிறது. நசியம் சிகிச்சை மூலம் சளி வெளியேற்றப்பட்டு, சுவாசப்பாதை சீராகிறது. எனவே,நசியம் சிகிச்சை சிறந்த நோய் எதிா்ப்பு ஆற்றலைத் தருகிறது. சிகிச்சையின் போது ஒரு நாள் மட்டும் வெந்நீா் அருந்த வேண்டும் என்றாா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.