அதிராம்பட்டினம், செப்.07
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹா நிர்வாகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தர்ஹா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தர்ஹா நிர்வாகத் தலைவர் எம். செய்யது சலாஹுதீன் வழிகாட்டுதல் பேரில், கரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு, நடைபெற இருந்த, ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹா 581 ஆம் ஆண்டு கந்தூரி விழாவில் மாற்றம் கொண்டு வருவது எனவும், அதன்படி, கந்தூரி நகர் ஊர்வலம் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை ரத்து செய்வது எனவும், கந்தூரி விழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை எனவும், கடற்கரைத்தெரு குடியிருப்பு பகுதிகளில் நிதி வசூல் கிடையாது எனவும், கந்தூரி விழா தொடங்கிய முதலாவது நாளிலிருந்து 11 நாட்கள் வரை குர்ஆன், ஹத்தம் பாத்திஹா ஓதி பிரார்த்தனை செய்வது என தீர்மானிக்கப்பட்டன.
இதைதொடர்ந்து, கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எஸ்.எஸ் பாக்கர் அலி சாகிப் ஆகியோரை தனித்தனியே சந்தித்து தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், அவர்களிடம் ஒத்துழைப்பு கோரினர். இந்நிகழ்வில், தர்ஹா நிர்வாகிகள் ஹாஃபிழ் சகாபுதீன், எம். பக்கீர் முகைதீன், ஸ்மார்ட் எம்.சாகுல், ஏ.எச் அப்துல் மாலிக், மவ்லவி ஹைதர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹா நிர்வாகக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தர்ஹா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தர்ஹா நிர்வாகத் தலைவர் எம். செய்யது சலாஹுதீன் வழிகாட்டுதல் பேரில், கரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு, நடைபெற இருந்த, ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் வலியுல்லாஹ் தர்ஹா 581 ஆம் ஆண்டு கந்தூரி விழாவில் மாற்றம் கொண்டு வருவது எனவும், அதன்படி, கந்தூரி நகர் ஊர்வலம் மற்றும் மக்கள் கூடும் நிகழ்வுகள் ஆகியவற்றை ரத்து செய்வது எனவும், கந்தூரி விழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை எனவும், கடற்கரைத்தெரு குடியிருப்பு பகுதிகளில் நிதி வசூல் கிடையாது எனவும், கந்தூரி விழா தொடங்கிய முதலாவது நாளிலிருந்து 11 நாட்கள் வரை குர்ஆன், ஹத்தம் பாத்திஹா ஓதி பிரார்த்தனை செய்வது என தீர்மானிக்கப்பட்டன.
இதைதொடர்ந்து, கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எஸ்.எஸ் பாக்கர் அலி சாகிப் ஆகியோரை தனித்தனியே சந்தித்து தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர், அவர்களிடம் ஒத்துழைப்பு கோரினர். இந்நிகழ்வில், தர்ஹா நிர்வாகிகள் ஹாஃபிழ் சகாபுதீன், எம். பக்கீர் முகைதீன், ஸ்மார்ட் எம்.சாகுல், ஏ.எச் அப்துல் மாலிக், மவ்லவி ஹைதர் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.