.

Pages

Sunday, September 20, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 லட்சம் மதிப்பீட்டில் திரவ பிராண வாயு மையம்!

அதிரை நியூஸ்: செப்.20
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார் நிலை  குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (20.09.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு தேவையான கூடுதல் திரவ பிராண வாயு மையம் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், 10 கிலோ லிட்டர் டேங்க் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார். 

தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

மேலும், பார்வையாளர்கள் காத்திருப்பு அரங்கில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு இரண்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்திட அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வம் மற்றும் மருத்துவக்கல்லூரி துணைக் கண்காணிப்பாளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.