.

Pages

Monday, September 7, 2020

தமிழக அரசின் 'நல்லாசிரியர்' விருது பெற்ற காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை!

அதிரை நியூஸ்: செப்.07
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கே.அனுராதாவுக்கு தமிழக அரசின் 'நல்லாசிரியர்' விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.09.2020) ஆசிரியர் தின விழா- 2020 யொட்டி டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.

தமிழக அரசின் சார்பில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கான பதக்கமும், நற்சான்றிதழும், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும், மாநில அளவில் தரமான பாடப் புத்தகங்களுக்கான மின்னணு வளங்களை வழங்கியதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஒன்றாக ஏழை, எளிய சாதாரண குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ரு.1 லட்சத்திற்கும் மேல் நிவாரண பொருட்கள் வழங்கியமைக்காக 14 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்த தன்னார்வலர்கள், ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பை சேர்ந்த 4 ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை துணைத் தலைவர் ரமேஷ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.