.

Pages

Friday, September 4, 2020

அதிராம்பட்டினத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ~ பரிசளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.04
நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர்கள் பாசறை சார்பில், 22 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அதிராம்பட்டினம் கிராணி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர் ராஜிக் அகமது தலைமையில், செயலாளர் ஜஹபர் சாதிக் முன்னிலையில், துணைத்தலைவர் ஜெஹபர் சாதிக் போட்டியை தொடங்கி வைத்தார்.

போட்டி நிறைவில், அதிரை ஏ.ஆர்.சி.சி அணி முதலிடமும், அதிரை ஏ.எஸ்.சி அணி இரண்டாமிடம் பிடித்தன. இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாவட்டச் செயலாளர் ஏ.தேவராஜ் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் நெல்சன் பிரபாகர், மாநிலப் பேச்சாளர் கரிகாலன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.5 ஆயிரம், ரூ. 4 ஆயிரம் ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நம்மாழ்வார், பிரபாகரன், காய்தே மில்லத், பழனிபாபா ஆகியோர் பெயர்களில் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில், அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.