அதிராம்பட்டினம், செப்.14
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்க அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் அதிராம்பட்டினம் ஆய்ஷா மகளிர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஒன்றிய துணைத்தலைவர் பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் கோபி, பொருளாளர் கோட்டை துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தலைவராக அகமது அஸ்ரப், துணைத் தலைவராக ஹாஜா ஷரீப், செயலாளராக ஜமால் முகமது, துணைச் செயலாளராக பெரமையன், பொருளாளராக குலாம் காதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற்றுக் கொடுப்பது, கொடையாளர்கள் மூலம் நலிவடைந்த உறுப்பினர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு ஏறபாடு செய்வது, ரயில், அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பாஸ் வாங்கிக் கொடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.