.

Pages

Monday, September 28, 2020

'கல்விமாமணி' விருது பெற்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்!

அதிரை நியூஸ், செப்.28
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராஜனுக்கு அரிமா சங்க ஆசிரியர் தினவிழாவில் 'கல்விமாமணி' விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா 27.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து வரவேற்றார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

சிறப்பு விருந்தினராக, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஜயலட்சுமி சண்முகவேல் கலந்துகொண்டு, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அஸ்ரப் அலி, சுராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக கல்விச் சேவை ஆற்றி வருகிறார்.
தாவரவியல் பாடப்பிரிவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து 100 சதவித தேர்ச்சி.  கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலராக பொறுப்பில் உள்ளார். சுமார் 20 க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களை நடத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பாராட்டைப்பெற்றவர். 

கடந்த 15 ஆண்டுகளாக பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மாநில அளவில் நடத்தப்பட்ட தாவரவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மாவட்ட அளவில் தேர்வுபெற்று கருத்தாளராக பணியாற்றியவர் ஆவார்.

மாணவர்கள் நல மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பாராட்டும் விதத்தில் அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், கல்விமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.