.

Pages

Wednesday, September 9, 2020

அரசுப் பள்ளியில் சேர்க்க அதிராம்பட்டினத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள்!

அதிராம்பட்டினம், செப்.09
அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்குமாறு மேலத்தெரு ஊராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் மேலத்தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த 1921 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தற்போது 135 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக. 17-ம் தேதி தொடங்கி, 1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, மேலத்தெரு ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமையிலான ஆசிரியர்கள் சோ.வெற்றிவேலன், க.ராஜாங்கம், கோ.ராஜமுருகன், மா.கலைச்செல்வி, த.ஹெப்சிபாய், பொ.மகேஸ்வரி, செ.விமல் ராஜ் ஆகியோர் அடங்கிய ஆசிரியர் குழுவினர், அதிராம்பட்டினத்தில் பிலால் நகர், மேலத்தெரு, கீழத்தெரு, முத்தம்மாள் தெரு, மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோர்களை சந்தித்து அவர்களிடம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக இப்பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் கே.நிஜார் அகமது, எம்.அசார்கான், ஜெ.பெனாசிர்கான், எம்.ஜமீர்கான், முகைதீன் அப்துல் காதர்,எஸ்.ஃபஹாத், பி.ஏ சைஃபுதீன், எஸ்.அசாருதீன் ஆகியோர் ஆசிரியர்கள் செல்லும் பகுதிகளுக்கு உடன் சென்று பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளித்தலைமை ஆசிரியை எம்.தமிழ்செல்வி கூறியது;
அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு முடிய சேர்க்கை கடந்த (17-08-2020) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கட்டணம் கிடையாது. புத்தகம், பை, நோட், வண்ண பென்சில்கள் மற்றும் கணித வடிவியல் பெட்டி, சீருடை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதிபோதனை வகுப்புகள் ஆகியவை நடத்தப்படுவது குறித்து பெற்றோர்களை வீடு வீடாக சென்று சந்தித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டுமென பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு, கிராமக்கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.