.

Pages

Wednesday, September 9, 2020

10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

தஞ்சாவூர், செப்.09
10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில், முதலமைச்சருக்கான மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் நிர்வாகிகள் வழங்கினர்.

10 ஆண்டுகள் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்கள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயில் நிலையத்தின் எதிரில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக - மமக பொருப்பு குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா கண்டன உரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் தஞ்சை ஐ. பாருக் மஹராஜ் கோஷங்கள் எழுப்பினார், மாநகரத் தலைவர் லுக்மான் ஹக்கீம் இறைவசனம் ஓதினார், மாநகர துணை செயலாளர் முகமது உசேன் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில், மாவட்ட பொருப்பு குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், வல்லம் பேரூர்
பொருப்பாளர் வல்லம் மஜீத் மாநகர கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவில், மாவட்ட துணை செயலாளர் ரியாஸ் அகமது நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்க்கு பிறகு தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சருக்கான மனுவை அளித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.