தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை (Strong Room) திறந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (25.09.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது
இன்று பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. பாதுகாப்பு அறையில் எலிகள் கரையான்கள் போன்றவை சேதப்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக செயல்படுகின்றன என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களை அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டார்.
இந்த பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் சுழற்சியின் அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணி மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையினை அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இவ்வாய்வின்போது தஞ்சாவூர் கோட்டாட்சியர் திருமதி வேலுமணி தேர்தல் வட்டாட்சியர் சந்தனவேல் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.