.

Pages

Sunday, September 20, 2020

ஒரத்தநாட்டில் TNTJ அமைப்பினர் 33 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.20
கரோனா பேரிடரை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரத்தநாடு கிளை சார்பில், 159-வது இரத்த தானம் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


முகாமிற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

இதில், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குருதி பரிமாற்ற அலுவலர் மருத்துவர் வேல்முருகன், இரத்த வங்கி ஆலோசகர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு, 33 யூனிட் இரத்தத்தை டி.என்.டி.ஜே அமைப்பின் கொடையாளர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர்.

இந்நிகழ்வில், மாவட்ட தொண்டரணி அப்துல்லா, மாவட்ட மாணவரணி இத்ரீஸ், ஒரத்தநாடு கிளை நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஆபிதீன், ஹாஜா, ஷேக் பரீத், முகமது ஃபஹது உள்ளிட்ட அவ்வமைப்பினர் பலர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை, ஒரத்தநாடு கிளை மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.