.

Pages

Wednesday, September 30, 2020

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை சிறையிலடைக்க கோரியும் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.முகமது ரஹீத் தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எல்.முகமது அஸ்கர், பொருளாளர் எம்.இத்ரீஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். அக்கட்சியின் அதிரை பேரூர் இணைச் செயலாளர் சி.அகமது  கண்டன கோஷம் எழுப்பினார்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒளரங்கசீப், சமூக ஊடக அணி மாவட்டத் தலைவர் முகமது அசாருதீன், அதிரை பேரூர் தலைவர் எஸ். அகமது அஸ்லம், மதுக்கூர் பேரூர் தலைவர் மாப்பிள்ளை தம்பி, மல்லிப்பட்டினம் தலைவர் அப்துல் பகத் உள்பட அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டு நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை சிறையிலடைக்க கோரியும் முழக்கமிட்டனர். 

முன்னதாக, அக்கட்சியினர் அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கத்தில் இருந்து கண்டன முழக்கமிட்டவாறு பேரணியாக சென்று பேருந்து நிலையம் சென்றடைந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.