அதிராம்பட்டினம், செப்.13
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (சிபிடி) அதிராம்பட்டினம் கிளை, பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து அதிராம்பட்டினம் காசரா ஏரிக்கரையில் பனை விதை நடும் விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை விதைகள் அறக்கட்டளை நிறுவனத்தலைவர் சத்திய காந்த் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கே.நியூட்டன், டாக்டர் பி.சதாசிவம், சிபிடி அமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். இதில், 5000 பனை விதைகள் நடுவதற்கு திட்டமிட்டு, முதல்கட்டமாக 100 பனை விதைகள் அதிராம்பட்டினம் காசரா ஏரிக்கரை பகுதியில் நடப்பட்டன.
இந்நிகழ்வில், சமூக ஆர்வலர் நெப்போலியன், சிபிடி அமைப்பின் அதிராம்பட்டினம் நிர்வாகிகள் சமீர், அஜீத் குமார், சூர்யா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாட்டினை ஜெ.அலெக்ஸ்சாண்டர் செய்திருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.