.

Pages

Saturday, September 12, 2020

பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் கடத்திய மினி வேன் - மாட்டு வண்டிகள் பறிமுதல்!


தஞ்சாவூர் செப்.12-
பேராவூரணி பகுதியில் உள்ள காட்டாறுகளில், அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக, வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் உத்தரவின் பேரில், பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமையில், பேராவூரணி சரக வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவமணி,  கிராம உதவியாளர்கள் சிவகுமார்,  சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். 

இதில், ரெட்டவயல் பகுதியில் கள்ளத்தனமாக மணல் ஏற்றி வந்த இரண்டு மாட்டு வண்டிகளையும், ஆவணம் பகுதியில் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டு வட்டாட்சியர் சென்ற வாகனத்தை கண்டதும், அதி விரைவாகச் சென்ற டாட்டா ஏஸ் வண்டியை விரட்டிச் சென்றும் கைப்பற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.