.

Pages

Saturday, September 19, 2020

பேராவூரணி அருகே துணை மின் நிலையம் திறப்பு!

பேராவூரணி, செப்.19-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே திருவத்தேவன் பகுதியில், 33/11 கி.வா துணை மின் நிலையத்தை, காணொளிக் காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார். 

இதையொட்டி திருவத்தேவன் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளர் வி.மாறன், உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளர் ஸ்ரீராம், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு நாடியம் சிவ.மதிவாணன், தெற்கு அருணாச்சலம், பேராவூரணி தெற்கு கோவி.இளங்கோ, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் விஜயா காந்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருவத்தேவன் முரளி, அடைக்கத்தேவன் ஆறுமுகம், குப்பத்தேவன் பாலமுருகன், செந்தலை ரகுமத்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுதாகர், சையது முகமது, பாமா செந்தில்நாதன், சாகுல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மணிசத்திரம் பாலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கணேசன், அருள்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இத்துணை மின்நிலையம் 16 எம்.வி.ஏ திறனுடன் டிடியூஜிஜேஒய் திட்டத்தில் அமைக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியதன் மூலம், திருவத்தேவன் பகுதியைச் சுற்றி உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடையில்லா சீரான மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.