.

Pages

Sunday, September 6, 2020

திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்தில் சென்னைக்கு தினசரி ரயில் சேவை தொடங்க கோரிக்கை!

பட்டுக்கோட்டை, செப்.06
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இரு மார்க்கத்திலும் சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத் தலைவர் என்.ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் எம்.பி. ஆகியோருக்கு தனித்தனியே அனுப்பியிருக்கும் மனுவில் கூறியிருப்பது;
COVID-19 நோய்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்து முழுவதுமாக  இயங்காமல் இருந்தது. மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் நமது மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் பேருந்து போக்குவரத்து மற்றும் ஒரு சில சிறப்பு இரயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய கேந்திரமாக விளங்கும் கிழக்கு டெல்டா மாவட்ட மக்கள் பயன்பெற ஏதுவாக எந்த இரயில்களும் இயக்குவதற்கு இந்நாள் வரை ஆணை பிறப்பிக்கப்பட வில்லை.

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, மதுக்கூர் மக்களுக்கும் பயன்தரும் வகையில் சென்னையில் இருந்து காரைக்குடி வரை இரு மார்க்கமும், தினம் ஒரு இரயிலை மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக இயக்கிட வேண்டும்.

மேலும் தங்களுடைய சீரிய முயற்சியால் இரயில்வே வாரியத்தால் ஒப்புதல் தரப்பட்டுள்ள தாம்பரம், செங்கோட்ட (திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக) இரயிலுக்குண்டான கருத்துருவின் படி இந்த இரயிலை தினமும் இயக்கிட ஆவண செய்யுமாறு இப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்ட ரயில்கள் இரு மார்க்கத்திலும் தினந்தோறும் இயங்கினால் சென்னையில் இருந்து இந்த பகுதிக்கு வருபவர்களும், இப்பகுதியில் இருந்து சென்னை செல்வோருக்கும் குறிப்பாக பணியில் உள்ளவர்கள் நீட் தேர்வெழுதும் மாணவர்கள், வயோதிகர்கள், நோயாளிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, மேற்கண்ட இரயில்களை திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கிட இரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டுமாய் இரயில் பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மனுவின் நகலை சென்னை இரயிவே பொது மேலாளர், திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர், தமிழக உணவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.