அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எம்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். முகாமில், ஆசிரியர்கள் சோ.வெற்றிவேலன், க.ராஜாங்கம், கோ.ராஜமுருகன், மா.கலைச்செல்வி, த.ஹெப்சிபாய், பொ.மகேஸ்வரி, செ.விமல்ராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் 16 மாணவர்கள் பள்ளியில் புதியதாகச் சேர்க்கப்பட்டனர். புதிதாக இணைந்த மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுதுகோல், புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாட்டினை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.
2020 - 2021 ம் கல்வியாண்டில் பள்ளியின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, பள்ளி எல்லைக்குட்பட்ட பிலால் நகர், மேலத்தெரு, கீழத்தெரு, முத்தம்மாள் தெரு, மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம், பள்ளியில் வழங்கப்படும் செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி, விளையாட்டு வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொளி வழிக்கல்வி, நீதிபோதனை வகுப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.