அதிரை நியூஸ்: செப்.10
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பயனடையவும் காய்கறி சாகுபடி செய்யவும் அதற்கான ஊக்கத்தொகையை பெறவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 27.17 இலட்சங்கள் 2020-2021ம் நிதி ஆண்டிற்கு நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டதின்கீழ் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களுக்கு இலக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பப்பாளி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு வீரிய ரக பப்பாளி கன்றுகள் 1 எக்டருக்கு ரூ.18,490/- என்ற நிதியுதவியில், நாவல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு வீரியரக ஒட்டுக்கன்றுகள் 1 எக்டருக்கு ரூ. 20,000/- என்ற நிதியுதவியில், பாரம்பரிய இரக காய்கறி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் 1 எக்டருக்கு ரூ. 15,000/- என்ற நிதியுதவியிலும், காய்கறி விதைப்பொட்டலங்கள் கிட் ஒன்றிற்கு ரூ. 10/- மானியத்திலும், காய்கறி சிறுதளை ஒன்றிற்கு ரூ. 356/- மானியத்திலும், வீட்டுத்தோட்டத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பிற்கு ஒன்றிற்கு ரூ. 320/- என்ற மானியத்திலும், வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வாழைத்தார் மூடாக்கு உறை எக்டர் ஒன்றிற்கு ரூ. 12500/- என்ற நிதியுதவியிலும், கொடிவகை காய்கறிகளான பீர்க்கு, பாகல், புடல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைக்க எக்டர் ஒன்றிற்கு ரூ. 2 இலட்சம் நிதியுதவியினையும், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அதனை போக்குவரத்து எடுத்து செல்ல ஏதுவாக 10 எண்கள் பிளாஸ்டிக் கிரேட்ஸ் ஒரு விவசாயிக்கு ரூ. 3750/- என்ற நிதியுதவியிலும், பழப்பயிர்கள் மற்றும் முந்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதனை அறுவடை செய்வதற்காக அலுமினியத்தாலான ஏணிகள் ஒரு விவசாயிக்கு ரூ. 10,000/- என்ற நிதியுதவியிலும் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார்.
திட்ட விபரங்களுக்கு கீழ்க்கண்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளவும்.
1. தோட்டக்கலை உதவி இயக்குநர், (நடவு பொருள்), தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், தஞ்சாவூர்- 9965362562
2. தஞ்சாவூர் மற்றும் பூதலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9943422198
3. ஒரத்தநாடு மற்றும் திருவோணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9488945801
4. பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303
5. கும்பகோணம்ää திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 7299402881
6. பாபநாசம், அம்மாப்பேட்டை மற்றும் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குநர் - 8526616956
7. பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் - 9445257303
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.