தஞ்சாவூர் செப்.10-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஆசிரியர் தின விழாவையொட்டி, லயன்ஸ் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் விருது வழங்கி பாராட்டப்பட்டனர்.
பேராவூரணி உதயம் விழா அரங்கில், பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் க.இளங்கோ தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் எம்.கனகராஜ், வட்டாரத் தலைவர்கள் ஆர்.திருவள்ளுவன், இ.வீ.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தாயகம் அ.தமிழரசனுக்கு கல்விச் சுடர் விருது, வீரியங்கோட்டை - உடையநாடு ராஜராஜன் கல்வி நிறுவனத் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கருக்கு சேவைச் செம்மல் விருது, பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
மேலும், ஆசிரியர்கள் எம்.நீலகண்டன், வி.ஜெய்சங்கர், டி.சோமு, என்.ரவி, ஏ.வி.சந்திரசேகர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் ஓரியன்டேஷன் மாவட்டத் தலைவர், பேரா. சையது அகமது கபீர் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார்.
விழாவில், பெருமகளூர் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புவனேஸ்வரிக்கு ஆன்லைன் படிப்புக்கு உதவும் வகையில் ரூ 11 ஆயிரம் மதிப்பிலான ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வழங்கப்பட்டது.
விழாவில், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் டாக்டர் மு.சீனிவாசன், டாக்டர் ஆர்.சந்திரசேகர், பாண்டியராஜன், பெஸ்ட் குமார், கே.ஆர்.வி.நீலகண்டன், வ.பாலசுப்பிரமணியன், அப்துல் கபூர், தெட்சிணாமூர்த்தி, மைதீன், தஸ்தகீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொருளாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். செயலாளர் குமார் என்ற பழனிவேல் நன்றி கூறினார்.
படம் விளக்கம்:
மனோன்மணி ஜெய்சங்கருக்கு சேவைச் செம்மல் விருது வழங்கும் போது எடுத்த படம் ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தாயகம் அ.தமிழரசனுக்கு கல்விச் சுடர் விருது,
பெருமகளூர் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, புவனேஸ்வரிக்கு ஆன்லைன் படிப்புக்கு உதவும் வகையில் ரூ 11 ஆயிரம் மதிப்பிலான ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.