.

Pages

Monday, September 28, 2020

அதிராம்பட்டினம் அரிமா சங்க ஆசிரியர் தின விழாவில் 'தமிழ்மாமணி' விருது வழங்கி கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.26
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா 27.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து வரவேற்றார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக, அரிமா சங்க மாவட்டத் தலைவர் எஸ்.விஜயலட்சுமி சண்முகவேல் கலந்துகொண்டு, ஆசிரியர் தின விழா பேருரை நிகழ்த்தி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ்.நாகராசன் அவர்களுக்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும், பேராசிரியர்கள் எம்.ஏ முகமது அப்துல் காதர், பி.கணபதி, கே.முருகானந்தம், கே.செய்யது அகமது கபீர், என்.உதயகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

விழாவில், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கே.அனுராதா மற்றும் சிறந்த சேவைக்காக விருது பெற்ற சங்கத்தலைவர் எம். அப்துல் ஜலீல், செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆகியோருக்கு சால்வை அணித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழாவில், சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைந்த ஹாஜா நசுருதீன், அயூப்கான் ஆகியோருக்கு, அரிமா சங்க மாவட்ட ஒரியண்டேஷன் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வினை, மாவட்டத் தலைவர் எம். கஜாலி முகமது தொகுத்தளித்தார். நிறைவில், செயலாளர் எம்.நிஜாமுதீன்  நன்றி கூறினார். முன்னதாக, கரோனா பாதிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. 

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அஸ்ரப் அலி, சுராஜ், ஷிஃபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் இம்தியாஸ் அகமது, அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, டி.பி.கே ராஜேந்திரன், அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், எம்.நெய்னா முகமது, சி.சார்லஸ், முல்லை ஆர்.மதி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், கலையரசன், எம்.ஏ முகமது அபூபக்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், ஒய்.முகமது அபூபக்கர், எச் அப்துல் ரெஜாக்  உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.