.

Pages

Saturday, August 3, 2013

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு !

இன்று [ 03-08-2013 ] காலை 9.15 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி எதிரே ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


சேது பெருவழிச்சாலையில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரே செல்லும் பிரதான மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் அறுந்து தொங்கிய மின்கம்பியை சரிசெய்தனர்.  இதனால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதியில் நிகழ இருந்து பெரும் விபத்து துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில்...
மின்கம்பிகள் எதிர்பாராத வகையில் அறுந்து கீழே விழும் நிகழ்வுகள் அதிரையில் அடிக்கடி நடைபெறுகின்றன. அனைத்து பகுதிகளிலும் மின்சார வாரிய ஊழியர்கள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் கீழே விழாதவாறு வலைகளை [ Mesh ] ஏற்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்தினால் இதுபோன்ற எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க இயலும் என்கின்றனர்.

7 comments:

  1. தகவலுக்கு நன்றி.

    இது போன்ற சம்பவம் பலமுறை ஏற்ப்பட்டும் மின்வாரியம் கவனம் செலுத்தாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. இனிமேலாவது நமதூரின் அனைத்து மின்கம்பிகளையும் சோதித்து பழுதாகி உள்ள மின் கம்பிகளை மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும். செய்வார்களா.!?

    ReplyDelete
  2. துரித நடவடிக்கையாக எங்கெல்லாம் சாலையின் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றோதோ அங்கெல்லாம் மின்கம்பிகள் கீழே விழாதவாறு வலைகளை [ Mesh ] ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. மின்வாரியம் நமதூரின் அனைத்து மின்கம்பிகளையும் சோதித்து பழுதாகி உள்ள மின் கம்பிகளை மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும். செய்வார்களா.!?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

  5. இது போன்ற சம்பவம் பலமுறை ஏற்ப்பட்டும் மின்வாரியம் கவனம் செலுத்தாமல் உள்ளது வேதனை அளிக்கிறது. இனிமேலாவது நமதூரின் அனைத்து மின்கம்பிகளையும் சோதித்து பழுதாகி உள்ள மின் கம்பிகளை மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும். செய்வார்களா.!?

    ReplyDelete
  6. மின் கம்பிகளை மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.