நாகப்பட்டினத்திலிருந்து ஈசிஆர் சாலை வழியாக அதிரையை கடந்து செல்லும் போது எதிரே வந்த நாய் குறுக்கே புகுந்ததால் திடிரென்று பிரேக் போடும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆறு மாதமே ஆன பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வாகனத்தில் பிரயாணம் செய்த மற்ற நால்வர்களும் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர்கள் ஆவார்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்புடன் காணப்பட்டது.
நாகப்பட்டினத்திலிருந்து கோவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் ஏற்பட்ட கொடூர விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
inna lillahi va inna ilaihi rajioonnnnnn allah avarhaluku nalla swarkathai koduka dua saivomaha
ReplyDeleteஒரு நாயால் விபத்து ஏற்ப்பட்டு இரு உயிர்கள் பழியாகி இருப்பது வேதனையாக உள்ளது.
ReplyDeleteவாகன ஓட்டுனரின் வேகமும் ஒரு காரணமாக இருக்கலாம். எத்தனை உயிரிழப்புக்கள் ஏற்ப்பட்டாலும் மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது.
நமதூர் பகுதியில் அடுத்தடுத்து வாகன விபத்துக்கள் ஏற்படுவது குடும்பங்களை பிரிந்து அயல் நாட்டில் வசிக்கக்கூடிய எங்களைப்போன்றோர்க்கு அச்சத்தை ஏற்ப்படுத்துகிறது.
ReplyDeleteInna lilaahi va inna ilahe rajivoon
ReplyDeleteInna lilaahi va inna ilahe rajivoon
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஅதிரையில் நாயின் தொல்லைகளால் விபரீதங்கள் ஏராளம் குறிப்பாக மிகவும் அதிகமாக இழப்புக்கள் ஏற்ப்படுவது இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கே அடிக்கடி கேள்விப்படக்கூடிய செய்தி நாய் குறுக்கேவந்து கீழே விழுந்து கால் ஒடிந்தவர்கலும் கை ஒடிந்தவர்களும் மண்டை ஒடைந்தவர்களும் ஏராளம்
இப்பொழது வாகனத்தில் வந்தவர்களுடைய இருவரின் உயிரேயே இழக்க நேரிட்டுவிட்டது.
இதற்கு அதிராம்பட்டினத்தில் பெருகிவரும் நாய்களையும் பன்றிகளையும் அதிகம்மக் பெருக விடாமல் கவணிக்க வேண்டிய பொறுப்பு அதிராம்பட்டினம் பஞ்சாயத்து போர்டே பொறுப்பு
இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உடனடியாக பெருகிவரும் நாய்களையும், பண்றிகளையும். கட்டுப்படுத்த உடனடியாக பஞ்சாயத்து போர்டு நடவடிக்கை எடுக்கும்படி என் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கேடுக்கொள்கின்றேன்
அதிரைமன்சூர்
ரியாத்
ஒரு நாயால் விபத்து ஏற்ப்பட்டு இரு உயிர்கள் பழியாகி இருப்பது வேதனையாக உள்ளது.
ReplyDeleteவாகன ஓட்டுனரின் வேகமும் ஒரு காரணமாக இருக்கலாம். எத்தனை உயிரிழப்புக்கள் ஏற்ப்பட்டாலும் மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது
தகவலுக்கு நன்றி,
ReplyDeleteவிபத்தில் பலியான இருவருடைய படங்களை தவிர்த்து மற்றபடங்களுடன் செய்தியாக வெளியிட்டிருக்கலாம். குறிப்பாக அந்த குழந்தையுடைய மிகவும் பரிதாபமான படத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு பார்ப்பதற்க்காக சென்றபொழுது இயக்கம் சார்ந்த & சாராத நம் சகோதரர்கள் பெரும் திரளாக கூடியிருந்தனர். நம் சகோதரர்களின் மனித நேய மிக்க செயலை கண்டு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் நெகிழ்ந்து போயினர். அவர்களில் சிலர் "நோன்பு காலம் என்று கூட பார்க்காமல் அதிரையை சார்ந்த இஸ்லாமிய பெருமக்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், மதம், அரசியல் அனைத்திற்க்கும் அப்பாற்பட்டு இறைவனுக்காக சகோதரத்துவத்தோடும் மனிதநேயத்தோடும் வந்து உதவியதற்கு நன்றியை தெரிவித்தனர்". இறைவன் நம் அனைவரையும் இதுபோன்ற விபத்துகளிலிருந்து காப்பாத்துவானாக! இதுபோன்ற மீட்பு பணிகளில் ஈடுபடும் சகோதரர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களுக்கு இஸ்லாமிய உணர்வுகளை சொல்லாலும் செயலாலும் எடுத்துவைக்கும்பொழுது அவர்களும் இஸ்லாத்தின் மீது வைத்திருக்கும் சந்தேகங்கள் களையப்பட்டு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவான் என்ற நம்பிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteAdirai charmen enna seigraar
ReplyDelete