.

Pages

Saturday, August 3, 2013

வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அதிரை சகோதரியின் அன்பான வேண்டுகோள் !

வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசிக்கக்கூடிய அதிரையர்களிடம் வாழ்வாதார உதவி வேண்டி அன்பான வேண்டுகோளை நம்மிடம் வைத்துள்ளார் நமதூர் சகோதரி.

இந்த சகோதரிக்கு உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரி வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
குறிப்பு : நம்பகமான சகோதரர் ஒருவர் தந்த தகவலின் அடிப்படையில் தளத்தின் நெறிமுறைக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 comments:

  1. நீங்கள் இணைத்து உள்ள இந்த கடிதத்தில் எந்த விதமான விபரமும் இல்லை proof .மேலும் சங்கத்தில் ஆதார கடிதம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் போலி போன்று தோன்றுகிரர்து.

    உதவி செய்பவர்கள் தக்க விபரங்கள் எதிர்ப்பபார்கள்.செய்திக்காக இப்படி பதிய வேண்டாம்

    ReplyDelete
  2. நீங்கள் இணைத்து உள்ள இந்த கடிதத்தில் எந்த விதமான விபரமும் இல்லை proof .மேலும் சங்கத்தில் ஆதார கடிதம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் போலி போன்று தோன்றுகிரர்து.

    உதவி செய்பவர்கள் தக்க விபரங்கள் எதிர்ப்பபார்கள்.செய்திக்காக இப்படி பதிய வேண்டாம்

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    ஒரு ஏழை சகோதரி உதவிகோரி ஒரு விண்ணப்பம் கொடுத்து இருக்கிறார்கள். உதவி செய்பவர்கள் தாராளமாக உதவலாம். உதாவாதவர்கள் உதாசினப்படுத்தாமல் இருக்கலாம்.

    என்ன அனுமதி வேண்டும்?
    எது மாதிரி புரூப் வேண்டும்?

    //இந்த சகோதரிக்கு உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரி வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.//

    பதிவில் எல்லா விபரங்களும் நம்பகமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட வேறு என்ன புரூப் வேண்டும்.

    நீங்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் சார்பாக வாழ்வாதார உதவிகள் ஒரு ஏழை சகோதரிக்கு கொடுக்கும்போது சங்கத்திடம் அனுமதி வாங்கிவிட்டா கொடுக்கிறீர்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. கோ.மு.ஜமால் அவர்களே நீங்கள் சொல்வது நீயாயம் தான் ஆனால் இந்த தலத்தில்
    வெளிநாடுவாழ் அதிரையர்களுக்கு அதிரை சகோதரியின் அன்பான வேண்டுகோள்,மற்றும் அதிரை மாணவ/மாணவிகள் அன்பு வேண்டு கோள் என்று இரண்டு முன்று பதிவுகள் வந்து இருக்கிறது.அதுவும் லெட்டர் டைப் செய்து வந்து இருக்கிறது.உதவி கேட்பவர்கள் கைப்பட எழுதி தான் பாத்து இருகின்றோம்.

    இரண்டு முன்று வருடம் ஆக அதிரைக்கு ஒருவர் நோன்பு மாதத்திற்கு மட்டும் வந்து செல்வார் அவர் வருடம் வருடம் பள்ளியில் தொழுகை நடைபெறு முன் நெஞ்சு வலி போல் நடிப்பார்.அவரின் நிலைமையை பார்த்து அங்கு வசிக்கும் முஹல்லாஹ் வாசிகள் பலரை தொடர்பு கொண்டு பல ஆயிரங்கள் வசூல் செய்து கொடுத்தனர்.பிறகு அவரை நமதூர் மருத்துவரிடம் சென்றபோது வந்தவர் போலியானவர் என்று நிரூபணம் ஆனது

    இதுபோல் நோன்பு நேரங்களில் போலியாக வருவார்கள். ஜகாத் கொடுபவர்கள் உரிய ஏழைகளுக்கு கொடுபதற்க்கு தான் ஆசை படுவார்கள்.அதனால் அவர்கள் உரிய ஆவணம் விசாரித்து தான் கொடுப்பார்கள்.இந்த தலத்தில் பதிந்து இருக்கும் லெட்டர் டைப் போன்றவை நம்பக தன்மையாக இருக்காது. பதிந்து இருக்கும் நபர்களின் முகவரி மற்றும் தொலைபேசி தாருங்கள்'...அது இப்போதே தர உங்களால் முடியுமா?

    ReplyDelete
  5. பதிலுக்கு நன்றி.

    நீங்கள் சொல்வது உண்மை, ஆனால் எல்லாவற்றையையும் அப்படி எண்ணிவிட முடியாது.

    கையெழுத்து, டைப்ரைட்டர்.
    இன்று மூளைக்கு மூளை கம்ப்யூட்டர் டைப் சிஸ்டம் வந்து விட்டது, ஆக அது எப்படி இருந்தாலும் புரியும்படி இருந்தால் போதும்.

    இந்த தளத்தில் பதியப்படும் அனைத்தும் தீர ஆராந்து பதியப்பட்டதே.

    ஏமாற்றுபவர்கள் இறைவனிடம் மாட்டிக்கொள்வார்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.