.

Pages

Saturday, November 8, 2014

AAMF லிருந்து விலகல் ! துபாயில் நடைபெற்ற கடற்கரை தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் முடிவு !

கடற்கரை தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் , 07-11-2014 அன்று ,     துபை ‘ஹார் அல் அன்ஸ்’ பகுதியில் உள்ள , சகோ .பைசல்  இல்லத்தில்  , தலைவர்  சகோ . இஸ்மாயீல்  தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில், கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
1. ‘அதிரை அனைத்து மஹல்லா’ (அமீரக)  கூட்டமைப்பிலிருந்து (AAMF) கடற்கரை தெரு அமீரக அமைப்பு வெளியேறுவது என திர்மானிக்கப்பட்டது. கடந்த பல மாதங்களாக செயல்படாமல் இருக்கும்,   இந்த  (Adirai All Muhallah
Forum )  பெயரளவிலான அமைப்பினால்,  நமது சமுதாயத்திற்கோ /  ஊருக்கு எந்த பயனுமில்லை. இதனால்  கடற்கரை தெரு அமீரக அமைப்பு   ' அனைத்து மஹல்லா கூட்டமைப்பிலிருந்து (அமீரக )'  வெளியேறுவது  என திர்மானிக்கப்பட்டது.

2. கடற்கரை தெரு அமீரக அமைப்பானது  ‘ஹந்துரிக்கு எதிராக’ கண்டனத்தை பதிவு செய்கின்றது. மார்கத்திற்கு முரண்படும் , ஹந்துரி போன்ற அனாச்சாரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமீரகஅமைப்பின் அங்கத்தினரும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரும் எந்த வித பொருளாதார ஒத்துழைப்பையும் இந்த அனாச்சார நிகழ்ச்சிக்கு செய்வதில்லை என்று தீர்மானிக்கபட்டது. மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில், பிரசுரங்களை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தெருநலன் சார்ந்த பல  விஷயங்கள் பேசப்பட்டு, வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்து,கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு

13 comments:

  1. வேதனையான செய்தி -அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைப்பு அவசர கால நிர்வாகிகள் கூட்டம் வைத்து பரிசீலிக்க வேண்டும் .அணைத்து தெரு முஹல்லா நிர்வாகிகளை சந்தித்து நிறை குறைகளை தீர்க்க வேண்டும்

    ReplyDelete
  2. வேதனையான செய்தி -அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைப்பு அவசர கால நிர்வாகிகள் கூட்டம் வைத்து பரிசீலிக்க வேண்டும் .அணைத்து தெரு முஹல்லா நிர்வாகிகளை சந்தித்து நிறை குறைகளை தீர்க்க வேண்டும்.உள்ளூர் வெளிநாடு வாழ் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நல்ல முடிவினை ஏற்கவேண்டும்

    mubeen

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரை அனைத்து முஹல்லா என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி கடந்த ‎காலங்களின் மாதத்திற்கு ஒரு கூட்டம் போடப்பட்டு குறைகள், ‎தீர்மானங்கள், முடிவுகள் போன்ற அம்சங்கள் தீட்டப்பட்டன. இதனைத் ‎தொடர்ந்து அயல்நாடுகளிலும் இதன் தொடர்ச்சியாக கிளைகள் நடந்து ‎வந்தது.‎

    ‎“இப்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு கூட்டமும் நமதூரில் ‎நடக்கவில்லை, நடந்ததாக தெரியவில்லை”.‎

    ‎“கேஸ் இணைப்பை ஆறு மாதத்திற்கு மேல் புக்கிங் செய்யாமல் விட்டு ‎விட்டால், அது தானாக ரத்தாகி விடும்”.‎

    ‎“குடும்ப அட்டையைக் கொண்டு ஆறு மாதத்திற்கு மேல் எந்த ஒரு ‎பொருளும் வாங்காமல் இருந்தால், அது தானாக ரத்தாகி விடும்”.‎

    ‎“மின் இணைப்பை ஒரு மாதத்திற்கு மேல் பணம் கட்டாமல் இருந்தால், ‎அது தானாக ராத்தகி விடும்”.‎

    இப்படி ஒவ்வொன்றுக்கும் நிலையான சில நிபந்தனைகல் இருக்குது. இது ‎எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம்.‎

    ஆனால், நமது அதிரை அனைத்து முஹல்லா ஆரம்பித்த நாட்களில், ‎வெளியூர்வாழ் அதிரையர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் தெரியுமா? ‎மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறந்தது, இனி எல்லாமே ஏற்ற ‎தாழ்வுகள் இல்லாமல் சமநிலையில் வைத்து பரிசீலிக்கப்படும் என்ற ‎கனவுகளோடு ஒட்டு மொத்த அதிரையர்களும் இருந்தார்கள் என்று ‎சொன்னால் அது சாலப்பொருந்தும்.‎

    எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த கூட்டமும் கூடாமல், ‎காலத்தை தாழ்த்தினது நிர்வாகிகளின் தவறு.‎

    இனியும் ஒன்னும் கேட்டுப் போகவில்லை. அவசரகால கூட்டத்தை கூட்டி ‎பிரிந்த முஹல்லாவை இணைத்து இதை ஒரு வலுவான கயிற்றாக ‎உருவாக்கி செயல் படுத்தவில்லை என்றால், மீதம் உள்ளவர்களும் பிரிந்து ‎போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.‎

    அப்படி நடந்தால் நஷ்டம் யாருக்கு?‎
    சிந்திக்க நேரம் இல்லை,‎
    செயல் படுத்த நேரம் உண்டு.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. I Accept Jamal kaka's comment. At the starting period AAMF people thought, that this is the revolutionary association for the devolopment our people and town. This association started without any partiality between streets or other muhallas. But now a days AAMF calenders only found in adirai masjids. But many of our people forget the aamf. It must build up again for the devolopment of adirai and unity between adirai streets.

      Delete
  5. அந்த அமைப்பின் தற்போதைய நிர்வாகிகள் செயல்பாட்டில் குறைகள் இருந்தால் இந்த கூட்டமைப்பிற்கு கடல்கரை தெரு சகோதர்களையே நிர்வாகிகளாக போடுதல் தற்போதைய காலத்தின் கட்டயாம் என்றால் அதுவே நிதர்சனம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Anaithu muhalla
    avaseyam veandum
    ahamed rethuvan
    advaisukku nanre.

    ReplyDelete
  9. Anbarkal
    nanparkal
    anaivarukkum assalamualaikkum.
    ethu...thagka thaampalaththel
    veluntha keeral
    ensaallah sareyakevedum
    veandu,,,,veandum avaseyam veandum
    aamf

    ReplyDelete
  10. Good decision
    AAmf consider as tea party and group photo federation
    Nothing achieved so far except few utilise existing follower funds

    ReplyDelete
  11. Well said
    # altaf ahamed

    Adirai (tea & samusa) Meeting Mentoring Federation

    ReplyDelete
  12. டீசமுசாஇல்லாமேமீட்டிங்போட்டாஅதுசப்புன்னுபோயிடுமே! அதனாலேதான்லேட்டு!வந்ததும்போட்டுடுவாங்க!கொஞ்சம் பொறுங்க!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.