.

Pages

Monday, November 3, 2014

ஜி.கே.வாசன் புதிய கட்சி அறிவிப்பு: பட்டுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜி.கே.வாசன், புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாகவும், திருச்சியில் கட்சியின் பெயர், கொடியை அறிவிக்க உள்ளதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து. புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவரது ஆதரவாளர்கள் பட்டுக்கோட்டை மணிக்குண்டு அருகே பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள். புதிய கட்சியை ஆதரித்தும் - வரவேற்றும் கோஷங்கள் எழுப்பட்டன.










2 comments:

  1. மூப்பனார் தமிழக தலைவராக இருந்தாலும் தன திறமையால் காமராஜருக்கு அடுத்து டெல்லி அரசியலில் ஒரு முடிவு எடுப்பவராக இருந்தார்.. சக்தி வாய்ந்த இந்திரா மற்றும் ராஜீவ் இவர்கள் மதிக்கும் மனிதராக , வலம் வந்தார்... வாசன் அவர்கள் மத்திய மந்திரியாக இருந்தாலும் அந்த அளவுக்கு உயரவில்லை .. தமிழகத்திலும் தனித்து நின்றாலும் ஜெயிக்கும் நிலைக்கும் தன நிலைமையை அவர் கூட்டி கொள்ள வில்லை.

    பத்தாண்டு காலம் மத்திய அரசில் அமைச்சராக இருந்த வாசனுக்கு, இப்பதான் ஆசை வந்துருக்காம் 'தமிழகத்தை முன்னெடுத்து செல்ல'... புதுக்கட்சி உங்களை 'பின்னெடுத்து செல்ல'

    ReplyDelete
  2. இன்றுபிரிவார்கள்நாளைகூடிவிடுவார்கள்.பிரிவதற்குஒரு காரணமும்கூடுவதற்குஒருகாரணமும்சொல்வார்கள்.இதுவரை தாய்கட்சியானகாங்கிரஸ்கட்சியில்லிருந்துநாற்பதுகட்சிகள்பிரிந்துபோய்அவைகளில்பலமீண்டும்சேர்ந்தன.பிரிந்தவர்கூடுவர். அதுபற்றிபேசிபயன்இல்லை!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.