ஜெயலலிதா கைது செய்யப்பட்டதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட மதுக்கூரை சேர்ந்த வ. பெரமையன் (வயது 26). வீட்டு மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து தெரியவந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தற்கொலை செய்து கொண்ட பெரமையன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வைத்திலிங்கம், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இன்று மதுக்கூர் மோகூரில் உள்ள பெரமையன் வீட்டிற்கு சென்றார். நிதி உதவி அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரூ.3 லட்சம் நிதி உதவிக்கான காசோலையையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, பரசுராமன் எம்.பி., தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட பால் கூட்டுறவு தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அதிமுக மதுக்கூர் ஒன்றிய செயலாளர் துறை செந்தில், மாவட்ட அம்மா பேரவை தலைவர் தண்டாயுதபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அதிமுக மதுக்கூர் நகர செயலாளர் முஹம்மது செரீப், ஊராட்சி மன்ற தலைவர் அய்யாவு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கோவி. பாலசுப்பிரமணியன், அதிமுக மோகூர் ஊராட்சி செயலாளர் நாராயணசாமி உள்பட அ.தி. மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
என்னமோ இவங்க ஜெயிலுக்கு போனதால எல்லாம் செத்துட்டாங்க மாதிரி சொல்றாங்க.... உண்மையா சொல்லப்போனால் உங்களுடைய கொள்ளையை நினைத்து அவமானப்பட்டு தான் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள்.... எம்ஜியார் வளர்த்த அதிமுக இப்படிப்பட்ட ஒரு கும்பலால் நாசமாகிறதே என்று கூட தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம்.
ReplyDeleteதமிழ்நாட்டை ஆழ ஒரு தமிழனை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாதா? தமிழா ஊழல்வாதிகளின் பின்னே செல்வதை தவிர்த்துவிடு.