அதிரை சாரா திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள ஈசிஆர் சாலையோரத்தில் வாரம் இருமுறை காய்கறிசந்தை செயல்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சந்தையில் பேராவூரணி, முத்துப்பேட்டை வியாபாரிகள் தற்காலிக கூடாரம் அமைத்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். அதிகாலை 7 மணிக்கு துவங்கும் விற்பனை தொடர்ந்து இரவு 8.00 மணி வரை நீடிக்கிறது. வாரந்தோறும் வெள்ளிகிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகியன் தினங்களில் செயல்படும் இந்த சந்தையில் காய்கறிகள் விலை மலிவாக கிடைப்பதால் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் வாங்கிச்செல்வார்கள். காய்கறிகள் பிரஷ்ஷாக கிடைப்பதால் விற்பனைக்காக உள்ளூர் வியாபாரிகளும் இவர்களிடத்தில் மொத்தமாக வாங்கி வருகின்றனர். எந்நேரமும் பரபரப்பாக காணப்பட்டு வரும்.
இந்நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தாங்கள் கொண்டுவரும் விரிப்புகளில் நிழலுக்காக தற்காலிக கூடாரம் அமைத்து, தார்பாய்களில் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால், மழைகாலங்களில் பொருட்கள் விற்பனை செய்வதில் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்காய வியாபாரி முத்துப்பேட்டை ஷாஜஹான் நம்மிடம் கூறியதாவது...
'வாரம் இருமுறை நடக்கும் இந்த சந்தையில் அனைத்துவித காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக உருளை, வெங்காயம், இஞ்சி,பூண்டு ஆகியன திருச்சியில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது. விலை மலிவாக விற்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர் வெயில்காலத்தில் பிரச்னை இல்லை என்றாலும், மழைகாலங்களில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது' என்றார்.
இந்நிலையில் அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தாங்கள் கொண்டுவரும் விரிப்புகளில் நிழலுக்காக தற்காலிக கூடாரம் அமைத்து, தார்பாய்களில் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால், மழைகாலங்களில் பொருட்கள் விற்பனை செய்வதில் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்காய வியாபாரி முத்துப்பேட்டை ஷாஜஹான் நம்மிடம் கூறியதாவது...
'வாரம் இருமுறை நடக்கும் இந்த சந்தையில் அனைத்துவித காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக உருளை, வெங்காயம், இஞ்சி,பூண்டு ஆகியன திருச்சியில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது. விலை மலிவாக விற்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர் வெயில்காலத்தில் பிரச்னை இல்லை என்றாலும், மழைகாலங்களில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.