.

Pages

Wednesday, November 12, 2014

ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அதிரையில் மத்திய வங்கிகள் இயங்கவில்லை !

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மருத்துவ உதவிகளை மேம்படுத்த வேண்டும். வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை கொண்டு வருவதுடன் வாரம் 5 நாட்கள் வேலை திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய திட்டத்தையும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் பேரும்,  தமிழகத்தில் உள்ள 67 ஆயிரம் வங்கி கிளைகளில் பணிபுரியும் சுமார் 2 லட்சம்  பேரும் பங்கேற்கின்றனர்.

இதனால் அதிரையில் இயங்கும் மத்திய வங்கிகள் இன்று மூடப்பட்டிருந்தது. வங்கியில் பணம் எடுப்பது, செலுத்துவது உள்ளிட்ட இதர பணிகளும், வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    ஊழியர்களே ஊழியம் செய்துகொண்டே இருங்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.