இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், 9 வட்ட அலுவலகங்கள், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் அந்தந்த மையங்களில் உள்ள படிவத்தில் நிறைவு செய்து உடனடியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வசதி தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் புகைப்படம், கருவிழிப்படலம், கைவிரல் ரேகை ஆகியவற்றை கணினியில் பதிவு செய்யும் பணிகள் நவ. 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையுடன் இந்த முகாமுக்குச் சென்று உடல்கூறு பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு தேசிய அடையாள அட்டைக்குப் பதிவு செய்யப்பட்ட விவரத்தில் இருந்து ஸ்மார்ட் கார்டு வடிவில் மின்னணு குடும்ப அட்டை வழங்க முடிவு செய்துள்ளது.
எனவே, மாவட்டத்தில் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
புகை படம் எடுத்து இன்னும் ஆதர் அட்டை வரவில்லை ,இதற்க்கு என்ன செய்வது ? சம்பதப்பட்டவர்களிடம் கேட்டால் வரும்,வரும், என்கிறார்கள் ......வரும் ஆனா வராதா
ReplyDelete