இதில் தனலட்சுமி வங்கியின் சென்னை மண்டல அதிகாரி திரு அஸ்ரப் அலி கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் கிளை மேலாளர் வி. சுந்தரேசன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மருத்துவர் மீரா ஷாஹிப், சமூக ஆர்வலர்கள் அக்பர் ஹாஜியார், சேக் அலாவுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் அயூப்கான் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதில் கிளை அலுவலர்கள் - ஊழியர்கள் - வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
கோச்சப்பா தெளபிக்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது ஒரு நல்ல செயல், அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இதனால் நமதூருக்கு ஏதேனும் பயன் உண்டா? அல்லது நம் அதிரை பொது மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?
நமதூரில் இயங்கும் இந்த வங்கி நமதூர் மக்கள் பணத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது, ஆகவே, 88-வது ஆண்டை நிறைவு செய்து 89-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த அதிரை கிளை, வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் இட வசதியை விரிவு படுத்தலாம், பொது மக்கள் பயன் பெரும் வகையில் ஊரில் நிழல் குடைகள் அமைக்கலாம், பசுமை மரக்கன்றுகளை நட்டு எதிர்காலத்தில் இந்த அதிரையை பசுமையாக மாற்றலாம், வங்கி வாசலில் மரக்கன்றுகளை நட்டு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் வெயிலினால் சூட்டு ஆவதை தடுக்கலாம்..
இன்னும் எத்தனையோ பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வங்கியின் தரத்தை இன்னும் உயர்த்தலாம்.
பழைய ஆண்டிலிருந்து புதிய ஆண்டிற்குள் நுழையும் பொது சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்று.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். .
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com