.

Pages

Thursday, November 6, 2014

அதிரை அருகே மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !

ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2011ம் ஆண்டு, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்தபோது, அந்நாட்டு கடற்படையிடம் பிடிபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட அவர்களிடம் போதைப்பொருள் இருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அவர்களுக்கு சமீபத்தில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் தம்பிக்கோட்டை வடகாடு - மரவக்காடு பகுதி மீனவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். மீனவ சங்கத்தின் பொறுப்பாளர்கள் சேகர், ராமையன், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக கட்சியின் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

களத்திலிருந்து நூவன்னா









No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.