.

Pages

Saturday, November 1, 2014

துபாயில் பேட்டரியில் இயங்கும் பசுமை பேருந்து அறிமுகம் !

துபாய் : சாலை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் பேருந்துகள் அமீரகத்தில் இயங்கி வருகிறது. வழக்கமாக எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளிலிருந்து வெளிப்படும் புகையினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. புகையை கட்டுப்படுத்தும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் பசுமை பேருந்துகளை நகரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நவீன தொழில் நுட்பத்துடன் பேட்டரியில் இயங்கும் பசுமை பேருந்துகளை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில், 200 கிலோ மீட்டர் வரை இயக்கலாம். பேருந்தின் பேட்டரியை 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை ரீஜார்ஜ் செய்து கொள்ளலாம். பசுமை பேருந்துகள் சோதனை ஓட்டமாக விரைவில் நகரில் பயணிக்க இருக்கிறது.

Source : Gulfnews

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.