ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா அடுத்து அமைந்துள்ள அக்கரை தர்ஹா அருகே மர்ம நபர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சப்தம் மிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இவற்றை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தட்டிக்கேட்டதாகவும். இதில் மற்றொரு தரப்பினர் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயமடைந்ததனர், காயமடைந்த இருவரும் திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அள்ளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆத்திரம் அடங்காத சுமார் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கடப்பாரை, அருவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தர்ஹாவின் சுற்று சுவரை இடித்து தரைமட்டமாக்கியதாகவும். தர்ஹா மீது கற்களை வீசி தாக்கியதாகவும், இதனால் தர்ஹாவின் மேற்பகுதி, தர்ஹாவின் மின் விளக்குகள் தேசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தர்ஹா இடத்தில் குடியிருந்து வருவோரின் குடிசைகளை பிரிச்சி எரிந்ததாவும் கூறப்படுகிறது.
இதன் பிறகு முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 கார் கண்ணாடிகளையும் உடைத்து சென்றனர். இதுபற்றி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் இளைஞர்கள் அனைவரும் தப்பி சென்றனர். அவர்கள் ஓட்டிவந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மட்டும் சம்பவ இடத்தில் கிடந்தது அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரத்தின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்வதாக போலீஸ் தரப்பில் கூறியதாக தெரிகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
சுனா ஈனா, முத்துப்பேட்டை
தலையை விட்டுட்டு, வாலைப் பிடித்த கதையாக இருக்குது, அப்பவே தலையை நட்பாக்கிக் கொண்டிருந்தாள் இந்நேரம் இந்த வால்கள் நம்மைப் பார்த்து, வாலை இங்கும் அங்கும் ஆட்டி நட்பு பாராடிக்கொண்டிருக்கும்.
ReplyDeleteஎதிரிகளை எதிரிகளாக பார்க்காமல், நண்பர்களாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த செயல் கண்டிக்கத்தக்கது.