.

Pages

Thursday, January 1, 2015

முத்துப்பேட்டையில் நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூர தாக்குதல்: பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி !

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா அடுத்துள்ள அக்கரை தர்ஹா அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் மர்ம கும்பல் கொடுரமாக தாக்கியதில் இருவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா அடுத்து அமைந்துள்ள அக்கரை தர்ஹா அருகே மர்ம நபர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சப்தம் மிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இவற்றை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தட்டிக்கேட்டதாகவும். இதில் மற்றொரு தரப்பினர் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயமடைந்ததனர், காயமடைந்த இருவரும் திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அள்ளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆத்திரம் அடங்காத சுமார் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கடப்பாரை, அருவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தர்ஹாவின் சுற்று சுவரை இடித்து தரைமட்டமாக்கியதாகவும். தர்ஹா மீது கற்களை வீசி தாக்கியதாகவும், இதனால் தர்ஹாவின் மேற்பகுதி, தர்ஹாவின் மின் விளக்குகள் தேசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தர்ஹா இடத்தில் குடியிருந்து வருவோரின் குடிசைகளை பிரிச்சி எரிந்ததாவும் கூறப்படுகிறது.

இதன் பிறகு முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 கார் கண்ணாடிகளையும் உடைத்து சென்றனர். இதுபற்றி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் இளைஞர்கள் அனைவரும் தப்பி சென்றனர். அவர்கள் ஓட்டிவந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மட்டும் சம்பவ இடத்தில் கிடந்தது அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தகவலறிந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், PFI மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து தர்ஹா பேரவை தலைவர் எஸ்.எஸ் பாக்கர் அலி சந்தித்து பேசினர். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வரும் திருவாரூர் மாவட்ட எஸ்.பி மகேஷ் குமாரை சந்தித்து குற்றவாளிகள் மீது துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரத்தின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தப்பியோடிய மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்வதாக போலீஸ் தரப்பில் கூறியதாக தெரிகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்: 
சுனா ஈனா, முத்துப்பேட்டை
வொர்க்ஸ் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்த மர்ம கும்பல்

1 comment:

  1. தலையை விட்டுட்டு, வாலைப் பிடித்த கதையாக இருக்குது, அப்பவே ‎தலையை நட்பாக்கிக் கொண்டிருந்தாள் இந்நேரம் இந்த வால்கள் நம்மைப் ‎பார்த்து, வாலை இங்கும் அங்கும் ஆட்டி நட்பு பாராடிக்கொண்டிருக்கும்.‎

    எதிரிகளை எதிரிகளாக பார்க்காமல், நண்பர்களாக பார்க்க ‎கற்றுக்கொள்ளுங்கள். ‎

    இந்த செயல் கண்டிக்கத்தக்கது.‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.