.

Pages

Thursday, January 1, 2015

செட்டியா குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து தர பேரூராட்சியிடம் நூர்லாட்ஜ் செய்யது கோரிக்கை !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த பல மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகள் நடந்தது.

இந்நிலையில் செட்டியா குளத்திற்கு ஆற்று நீர் வந்ததை அடுத்து தண்ணீரால் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இப்பகுதியில் பள்ளி சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வருகின்றனர். மேலும் குளத்தின் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக செட்டியா குளத்தை சுற்றி பாதுகாப்பான தடுப்பு சுவர் ஏற்படுத்தி தர அதிரை பேரூராட்சியின் 12 வது வார்டு உறுப்பினர் 'நூர்லாட்ஜ்' செய்யது முஹம்மது அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...




2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    முறையான கோரிக்கை, இதை நமது சேர்மன், தம்பி அஸ்லம் அவர்கள் ‎முறையோடு செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. முறையான கோரிக்கை, இதை நமது சேர்மன், தம்பி அஸ்லம் அவர்கள் ‎முறையோடு செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு.

    மேலும் இந்த குளத்திற்கு தடுப்பு சுவர் மிக மிக அவசியம் வயதானோர்,குழந்தைகள் மற்றும் ஆடு மாடுகள் கூட அந்த சறுக்கலில் தவறி விழுவதற்கு சாத்தியம் உள்ளது .

    அங்கு பாதையில் கிடக்கும் குப்பைகளை தினமும் அகற்றி முறையான குப்பை தொட்டி ஒன்றும் அமைத்து கொடுத்தால் பள்ளிசெல்லும் மாணவர்களுக்கும் மேலேத்தெரு,கீழத்தெரு,நடுத்தெரு பழஜ்செட்டி தெரு பேரூந்து நிலையம்,பள்ளிகள் ,கடைதெரு மற்றும் ஆஸ்பத்திரி செல்லும் மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த பாதையை குறுக்குவழியாக பயன்படுத்துவதால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.