இந்த ரேஷன் கடையின் முகப்பு பகுதி திறந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தது. இதனால் இரவு நேரங்களில் வீதிகளில் சுற்றி திரியும் ஆடு மாடுகள் மலம், சிறுநீர் கழித்து விடுவதால் துர்நாற்றம் வீசி வந்தது. கடை அடைக்கப்பட்ட நேரங்களில் சிலர் வாகனங்களை நிறுத்தி வைப்பது உண்டு.
இந்நிலையில் செக்கடி பள்ளி நிர்வாக கமிட்டியின் சார்பில் ரேஷன் கடையின் வளாகத்தில் யாரும் உள்ளே செல்லாதவாறு முகப்பு பகுதியை சுற்றி இரும்பிலான கேட் பொறுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியால் இன்று ரேஷன் கடை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேட் பொருத்தும் பணியை இப்பகுதியை சேர்ந்த பலர் பாராட்டினாலும், சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 'நெருக்கடியான இடத்தை சுற்றி அடைத்து வைத்திருப்பதால் போதுமான இடவசதி கிடைக்காது என்றும், ரேஷன் பொருட்களை வாங்க வரும் பெண்கள் நீண்ட வரிசையில் சாலையில் வந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் இப்பகுதியில் வாகன நெருக்கடி ஏற்படும்' என கூறுகின்றனர்.
பள்ளி கமிட்டி பணத்தை வீண் விரையம் செய்கிறார்கள் .எங்கே யும்
ReplyDeleteநடக்காத ஒன்று
This comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteகிழட்டு பெண்னுக்கு பட்டு சேலை கட்டுவது போன்றுள்ளது இக்காரியம், கீற்று கொட்டகை வழுவிழந்து காணப்படும் இத்தருணத்தில் இக்காரியத்திற்க்கு கொட்டகைக்கு பதிலாக சீட் போடலாமே...
அல்லது சன்சைட் உடைந்து விழும் தருவாயில் உள்ளது அதை சீர் செய்யலாமே?...
பொதுமக்கள் கியூவில் நின்று பொருட்களை வாங்குமிடம் என்பதினால் ஆபத்துகளை உணர்ந்து அதை சரி செய்யலாமே?
ஒரு செயலை செய்வதுவரை காத்திருந்து அது செயல்படுத்தப் பட்ட பின்னர் குறை கூறுவது நம்மிடையே வாடிக்கையாகிவிட்டது.
ReplyDeleteபின்னூட்டமிட்டுள்ள சகோதரர்களுக்கு முன்னரே ஏன் ஆலோசனை வரவில்லை. ஐந்து விரல்களும் ஒன்றல்லவே.. செக்கடிக்குளம் சீர் செய்யப்பட்ட நிலையில் அப்போது பல ஆலோசனைகளை வைக்கலாமே.
சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஏதாவது நல்லது செய்தாலும் அதில் ஏதேனும் குறை கண்டுபிடிப்பதை எப்போது விடப்போகிறோமோ தெரியவில்லை.
என்னை பொருத்தவரை இந்த இரும்பு கேட் அடைப்பு சரியானதே. ஆடுமாடுகள் அசுத்தம் செய்வதை நான் ஊரில் இருந்த காலங்களில் பலமுறை கண்டுள்ளேன்.
இப்போதெல்லாம் யாரும் கவுரவம் பார்ப்பதில்லை. தேவைப்பட்டால் களத்தில் இறங்கி சேவை செய்ய யாரும் தயங்குவதில்லை. குறை கூறும் சகோக்கள் ஏதேனும் சேவை செய்திருந்தால் அதனை அறியத் தாருங்கள் வாழ்த்துவோம்.. துஆ செய்வோம். அதை விடுத்து குறை கூறுவதை நிறுத்தி எதையும் பாஸிட்டிவ்வாக அப்ரோச் செய்து பாருங்கள் வாழ்வு இனிக்கும்.
சகோதரர்களுக்கு .... பள்ளி கூடங்களுக்கு பெற்றோர்கள் சங்கம் இருப்பது போல் நமதூரின் ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் அந்த அந்த தெருவில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் வட்ட வழங்கு அலுவலக அனுமதியோடு அங்கு வரும் பொருட்கள் மற்றும் பொருட்களின் இருப்பு மக்களுக்கு சரியாக விநியோகம் செய்யபடுகின்றதா? என்பதை சரிபார்ப்பதால் நலமாக இருக்குமே.
ReplyDeleteதெளிவில்லாத வேலைகளை மிக தெளிவாக செய்பவர்கள் செக்கடி மேட்டு நிருவாகம் ..
ReplyDelete