.

Pages

Friday, January 2, 2015

செடியன்குளம்: செவிடன் காதில் ஊதிய சங்கா ?

பாரம்பரியமும் பயன்பாடும் மிக்க செடியன்குளம் பாலைவனமாக பல வருடங்கள் வறண்டு கிடந்த நிலையில் இறைவனின் அருட்கொடையான இந்த வருட மழையாலும், ஆற்று நீராலும் மீண்டும் நிரம்பி வழிந்தது.

நீர் நிறைந்த செடியன்குளம் குறித்தும் அதிலிருந்து வீணாக வெளியேறிவரும் நீர் குறித்து எச்சரித்தும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுவான கோரிக்கை ஒன்றையும் 'கானல் நீராகும் செடியன்குளம்' என்ற நமது முந்தைய பதிவில் தெரிவித்திருந்தோம் என்றாலும் இதுநாள் வரை எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளோ மராமத்து பணிகளோ செய்யப்படாமல் இதுவரையில் பல லட்சம் லிட்டர் நீர் வெளியேறி மீண்டும் ஒரு பலைவனமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வரும் நிலையில் இப்படி சம்பந்தப்பட்டவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது மீண்டும் டேங்கர் லாரிகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு மக்களை தள்ளிவிடும் என எச்சரிக்கின்றோம். ஏனெனில் இங்கே நமது பொடுபோக்குத்தனத்தால் வீணடிக்கப்படுவது வெறும் நீரல்ல இறைவனின் அருட்கொடை என்பதை நினைவூட்டுகின்றோம்.

அக்கறையுள்ள யாராவது முன்வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றோம்.

அதிரை நியூஸ் குழு
குளத்திலிருந்து கசிந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

6 comments:

  1. தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் மக்களுக்கு இந்த செய்தி வேதனை தரும்.பெரிய ஜும்ஆ பள்ளி பராமரிப்பில் இருக்கும் இந்த செடியன் குளத்தை முஹல்லா வாசிகளிடம் பொது வசூல் செய்து வீணாக கசியும் தண்ணீர்ரை சரிபடுத்தலாம். இல்லையென்றால் sdpi கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிலால் நகர் வார்டு கவுன்சிலர் அவர்களை அணுகி செடியன் குளம் பகுதியல் இருக்கும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் எரிபுர கரை ஊராட்சி தலைவர்,ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மலை அய்யனை அவர்களையும் சந்தித்து முறையிட்டு இனி வரும் காலங்களில் தண்ணீர் வீணாக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.அல்லாஹ் துணை நிற்பான்

    ReplyDelete
  2. ஏன் செடியன்குளத்திற்கு மட்டும் இந்த நிலமை? இதற்கு தண்ணீர் கொண்டுவர சமீபத்தில் இப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி களத்தில் இறங்கி செயல்பட்டார்களே!

    அதேபோன்று துகாப்பு ஏற்பாடுகளோ மராமத்து பணிகளோ செய்வதற்கு உரிய அதிகார வர்க்கங்களை அணுகலாமே. அல்லது. அதிகாரிகளுக்கு மனு கொடுத்து அதனை அதிரை நியூஸில் பதியலாம். அப்படியும் நடவடிக்கை இல்லையென்றால் இருக்கவே இருக்கு அறவழி போராட்டம். அதை கையிலெடுக்கலாம். அதிகார வர்க்கங்கள் அப்போது அலறி அடித்துக் கொண்டு வருவார்கள். இதற்கு அவசர கால நடவடிக்கையாக யாரையும் எதிர் பார்க்காமல் இப்பகுதி இளைஞர்களே களத்தில் இறங்கலாம். வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  3. ஏன் செடியன்குளத்திற்கு மட்டும் இந்த நிலமை? இதற்கு தண்ணீர் கொண்டுவர சமீபத்தில் இப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி களத்தில் இறங்கி செயல்பட்டார்களே!

    அதேபோன்று துகாப்பு ஏற்பாடுகளோ மராமத்து பணிகளோ செய்வதற்கு உரிய அதிகார வர்க்கங்களை அணுகலாமே. அல்லது. அதிகாரிகளுக்கு மனு கொடுத்து அதனை அதிரை நியூஸில் பதியலாம். அப்படியும் நடவடிக்கை இல்லையென்றால் இருக்கவே இருக்கு அறவழி போராட்டம். அதை கையிலெடுக்கலாம். அதிகார வர்க்கங்கள் அப்போது அலறி அடித்துக் கொண்டு வருவார்கள். இதற்கு அவசர கால நடவடிக்கையாக யாரையும் எதிர் பார்க்காமல் இப்பகுதி இளைஞர்களே களத்தில் இறங்கலாம். வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  4. போராட்டமே ஒரே தீர்வு

    ReplyDelete
  5. நீர் இன்றியமையாதது என்பதை நாம் சில வருடங்களாக அனுபவித்து வருகிறோம் .
    ஆகையால் பெரிய ஜுமுஆ பள்ளி நிருவாகம் தலையிட்டு நீரை சேமிக்க நடவடிக்கை எடுத்தால் நன்று .

    ReplyDelete
  6. வெயிலின் அருமை மழை காலத்திலும் தண்ணீரின் அருமை கோடை காலத்தில் தான் தெரியும் என்பார்கள், இப்போ வீணாகும் தண்ணீர் ஊரே நினைத்து பார்க்கும் நேரம் வரும், வரும் முன்பு காப்போம் என்பது போல தன்னார்வர்கள் இதற்க்கு முடிவு பண்ண வேண்டும்.

    கட்சிக்காக வேனை எடுத்துக்கொண்டு போறோம் இதற்காக கொஞ்சம் சிரமம் மேற்கொள்ளக்கூடாதா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.