இது தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று மாலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். இதில் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
கூட்ட முடிவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் நாளை காலை நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிப்பது எனவும், கூட்டத்தில் அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை காலை சரியாக 9 மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிரை பள்ளிவாசல்களிலும் இது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த விசயத்தியாவுது ஊர் மக்கள் ஒன்றுனைந்து வெற்றி வாகை சூடி வருவோம்.,(இன்ஷா அல்லாஹ்)
ReplyDeleteஇந்த விசயத்தியாவுது ஊர் மக்கள் ஒன்றுனைந்து வெற்றி வாகை சூடி வருவோம்.,(இன்ஷா அல்லாஹ்)
ReplyDeleteIn sha Allah ,
ReplyDeleteWe can
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteவிடா முயற்சி வெற்றியைத்தரும் என்பார்கள், அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள், கேட்க்காத கடன் வராது என்பார்கள், நெருங்காத உறவு விலகிப் போகும் என்பார்கள்.
அதுபோல நமது சேர்மன் தம்பி அஸ்லம் அவர்கள் விடாது எடுத்த இந்த முயற்ச்சி வெற்றியத் தரும்.
இனிமேலாவது அதிரை மக்கள் அரசு மருத்துவமனையை மதிக்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
அரசு மருத்துவமனையை முறையாக நாம் பயன்படுத்தாமல் எல்லாவற்றிற்கும் தனியார் மருத்துவமனைகயை நாடுவதால் அரசு இதில் சரியாக கவனம் செலுத்தாமல் உள்ளது. இத்தகைய போராட்டத்தின் மூலியமாக நமது தேவையையும் அவசியத்தையும் அரசின் கவனத்திற்க்கு எடுத்து செல்லவேண்டும்
ReplyDeleteநமது கோரிக்கையான '24 மணிநேர மருத்துவமனை' என்பதற்கு பதிலாக 'சுகாதார சீர்கேடு' என பொருளை மாற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கோட்டாட்சியர் என்பதால் மிகுந்த கவனத்துடன் கலந்து கொள்ளவும்.
ReplyDelete