.

Pages

Saturday, April 25, 2015

தமாகா முதல் பொதுக்குழு கூட்டத்தில் M.M.S குடும்பத்தினர் பங்கேற்பு !

அதிரை M.M.S குடும்பத்தை சேர்ந்தவர் M.M.S. பஷீர் அஹமது. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில பொதுக்குழு இன்று [ 24-04-2015 ] சென்னை வானகரத்தில் இன்று நடந்தது. இதில் ஜி.கே.வாசன் த.மா.கா.வின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்கள் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமாகா மூத்த தலைவர்கள் ஜிகே வாசன், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ் சித்தன் ஆகியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது M.M.S குடும்பத்தினர் உடனிருந்தனர்.

பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்ற M.M.S. குடும்பத்தினர் நேற்று மரியாதை நிமித்தமாக ஜி.கே வாசன் இல்லத்தில், ஜிஆர் மூப்பனார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்றைய சந்திப்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.