
சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிரையும் ஒன்று. ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இந்த ஊரைச் சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிழளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது. மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. இதற்காக அவசர . மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த [ 30-03-2015 ] அன்று அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மனு அளித்தும் இதுதொடர்பாக இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் எதிர்வரும் அன்று [ 30-04-2015 ] அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அதிரை அனைத்து மஹல்லா மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவோடும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போராட்டம் தொடர்பாக வெளியிடப்பட உள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த காலங்களில் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பை ஒரு முறை கீழ்கண்ட சுட்டியின் இணைப்பில் உள்ள பதிவுகளை வாசிக்க வேண்டுகிறோம்.
'அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பு !'
Plz correction ஜம்சுல் இஸ்லாம் Write word. சம்சுல் இஸ்லாம் Ok
ReplyDeleteபழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து மருத்துவமனை, அரசு சமுதாய நல மையமாக தரம் குறைந்து "நோஞ்சான்' நிலையில் உள்ளது இருந்தாலும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்த மருத்துவமனை இன்று 24 மணி நேர மருத்துவ வசதி தேவை என்று கோரிக்கை எழுந்துள்ளது அடிக்கடி நடக்கும் விபத்து, அவசர உதவி, மகப்பேர் மருத்துவம் இல்லாததால் உயிர் இழப்பு, போதிய மருத்துவர் பகல் நேரத்தில் இல்லாதது என்று பல காரணங்கள். சுகாதாரம் சுத்தம் இருக்குதா என்றல் இல்லை பல குறைகள் கொண்ட மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும்.
ReplyDeleteமனித நேயம் சேவை மனப்பான்மை கொண்ட சேர்மன் அஸ்லம் அவர்களின் முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பு கொடுப்போம்.இன்ஷா அல்லாஹ்!
இது எல்லாம் ஓகே . சின்ன சிங்கப்பூர் மேட்டர் என்னாச்சு ? மக்கள் உங்களுக்கு எதிராக போராடும் முன் விழித்து கொள்வாரா?
ReplyDelete