.

Pages

Sunday, April 26, 2015

காணாமல் போன பைக் மீட்பு !

முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் முகம்மது மாலிக். சமூக ஆர்வலரான இவர் பல்வேறு சமூக பிரச்சனைக்காக போராட்டம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பட்டரை குளத்தில் பேரூராட்சி நிர்வாகம் முறைக்கேடாக திட்டப்பணியை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செய்ததால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பட்டரைக் குளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த பள்ளிவாசல்கள், கோவில், மற்றும் வீடுகள் உட்பட 39 ஆக்கிரமிப்புகள் இடித்து தரமட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நாளிலிருந்து சமூக ஆர்வலர் முகம்மது மாலிக்கிற்கு அச்சுருத்தல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் சமூக ஆர்வலர் முகம்மது மாலிககிற்கு ரகசிய அச்சுருத்தல் இருப்பதாக தகவல் போலீசாருக்கு கிடைத்ததையடுத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் சென்ற ஜனவரி 23-ம் தேதி சமூக ஆர்வலர் முகம்மது மாலிக்கின் சொந்ததான டி.வி.எஸ்.ஜூப்பிட்டர் வெள்ளை நிற பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த போது மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்று விட்டனர். இதில் பைக் உட்பட அதிலிருந்த முக்கிய ஆவணங்கள், செல்போன் ஆகியவையும் சேர்ந்து காணாமல் போனது.

இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல் போன பைக்கை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் வீட்டு அருகே உள்ள அரசக் குளத்தில் வாலிபர்கள் குளித்து கொண்டிருக்கும் போது குளத்துக்குள் பைக் தென்பட்டதை கண்டு தண்ணீர்குள் கிடந்த பைக்கை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த பைக்கை பார்த்தபோது 3 மாதங்களுக்கு முன் காணாமல் போன சமூக ஆர்வலரின் பைக் என்று தெரியவந்தது. அதனையடுத்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் குளத்திலிருற்து மீட்கப்பட்ட பைக்கைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக்கிற்கு அச்சுருத்தல் ஏற்படுத்துவதற்கே அவரது பைக்கை குளத்துக்குள் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் யார் ? குளத்தில் வீசி சென்றதற்கான காரணம் என்ன ? என்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை 
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.