.

Pages

Saturday, April 18, 2015

நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி !

அதிரை நடுத்தெரு வாய்க்கால் தெரு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் அப்துல் முனாஃப், அதிரை பைத்துல்மால் துணை பொருளாளர் அப்துல் மாலிக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

விழாவில் கல்வி குழு தலைவர் அப்துல் காதர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகம்மது ஹனிபா, அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் முகம்மது சரீஃப், 21வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராகிம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஜமால் முகம்மது, 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மாலா வரவேற்புரை நிகழ்த்தினார். விழா முடிவில் பள்ளி 3 ஆம் வகுப்பு ஆசிரியை நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் இடையே பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆங்கில பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தனித்திறமையை நிருபித்தனர்.

விழாவில் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'மணிச்சுடர்' சாகுல் ஹமீது

1 comment:

  1. அம்மா உணவகம்,அம்மா குடிநீர் போன்ற அம்மாவை முன்னிலைப்படுத்தும் வியாபாரத்தில் உடனடியாக ஆட்கள் பணியமர்த்தப்படுகிரார்கள் ஆனால் தமிழகமெங்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி இருக்குது இதனால் மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.

    உயர் பள்ளி மாணவர்கள் ஆங்கில பாடம் கற்பதை கடினமாக கருதுகின்றனர். தேர்வு களில் மதிப்பெண் குறைவதோடு, பள்ளி படிப்புக்குபின், பல்வேறு வாய்ப்புகளை இழக்கவும் நேரிடுகிறது. இத்தகைய தன்மையை மாற்ற, ஆங்கில பாடத்தை எளிதாக கற்கும் விதத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில பாட ஆய்வகம் அமைக்கப் பட வேண்டும்.

    நிறைய குழந்தைகளுக்கு ல ள ழா ர இது எல்லாம் சரியாக உச்சரிப்பு இல்லையாம் அதற்க்கு என்ன வழி?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.