விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் அப்துல் முனாஃப், அதிரை பைத்துல்மால் துணை பொருளாளர் அப்துல் மாலிக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கல்வி குழு தலைவர் அப்துல் காதர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகம்மது ஹனிபா, அதிரை பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் முகம்மது சரீஃப், 21வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராகிம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஜமால் முகம்மது, 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மாலா வரவேற்புரை நிகழ்த்தினார். விழா முடிவில் பள்ளி 3 ஆம் வகுப்பு ஆசிரியை நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் இடையே பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆங்கில பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தனித்திறமையை நிருபித்தனர்.
விழாவில் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'மணிச்சுடர்' சாகுல் ஹமீது
அம்மா உணவகம்,அம்மா குடிநீர் போன்ற அம்மாவை முன்னிலைப்படுத்தும் வியாபாரத்தில் உடனடியாக ஆட்கள் பணியமர்த்தப்படுகிரார்கள் ஆனால் தமிழகமெங்கும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி இருக்குது இதனால் மாணவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.
ReplyDeleteஉயர் பள்ளி மாணவர்கள் ஆங்கில பாடம் கற்பதை கடினமாக கருதுகின்றனர். தேர்வு களில் மதிப்பெண் குறைவதோடு, பள்ளி படிப்புக்குபின், பல்வேறு வாய்ப்புகளை இழக்கவும் நேரிடுகிறது. இத்தகைய தன்மையை மாற்ற, ஆங்கில பாடத்தை எளிதாக கற்கும் விதத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில பாட ஆய்வகம் அமைக்கப் பட வேண்டும்.
நிறைய குழந்தைகளுக்கு ல ள ழா ர இது எல்லாம் சரியாக உச்சரிப்பு இல்லையாம் அதற்க்கு என்ன வழி?